முன்னிலை சோஷலிஸக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதியான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை பொலிஸார் படுமோசமாகத் தாக்கி அடாவடித்தனமாக கைது செய்தமைக்கு எதிராக முன்னிலை சோஷலிஸக் கட்சி கடந்த 12ம் திகதி மனித உரிமைய ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாயகொட உட்பட சில உறுப்பினர்கள் மனித உரிமை ஆணையத்திற்கு முறைப்பாடு செய்ய வந்த வேளையில் கொரோனா பரம்பல் காரணமாக இலத்திரனியல் மற்றும் தொலைபேசி ஊடாக மாத்திரமே முறைப்பாடு செய்ய முடியுமென அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறியதையடுத்து இலத்திரனியல் மூலமாக முறைப்பாடு செய்யப்ப்டது.