தெற்கு மீனவர்கள் வட கடலில் மீன்பிடித்தலை நிறுத்தக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்த போராட்டத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜூன் 15 திங்கள் அன்று வடமராச்சி கிழக்கில் உள்ள மருதங்கேனி பிரதேச செயலகம் முன் ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான போராட்டத்தில் அப்பகுதி மீனவர்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திர குமார், தெற்கில் உள்ள மீனவர்களுக்கு மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கமும் கடற்படையும் உதவுவதாக குற்றம் சாட்டினார்.
இது குறித்து காவல்துறை மற்றும் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை இது தடுக்கப்படவில்லை என்று செல்வராசா கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தெற்கு மீனவர்கள் வடக்கில் மீன்பிடிப்பதால் வடமராச்சி கிழக்கு மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கி மீனவர்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர் என்று கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.