நாரஹென்பிட்டி பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனது காதலியின் வங்கி அட்டையிலிருந்த 409,000 ரூபா பணத்தை அனுமதியின்றி பயன்படுத்தியமை தொடர்பில், உயிரிழந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.
ஹங்வெல்ல பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டிருந்தார்.