முறையற்ற வழிகளில் பணம் சம்பாதிக்கும் நபர்களையும், கடத்தல்காரர்களையும், செல்வந்தர்களையும் திடீரென்று உளவுத்துறை தேடுவதாகவும் ரகசிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட பாதுகாப்பு பாட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையின் போது, சொத்து வைத்திருக்கும் நபர்கள் குறித்த ரகசிய அறிக்கைகள் தயாரிக்கப்படவுள்ளன.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், பயங்கரவாத நடவடிக்கைகள்,மோசடி, லஞ்சம் மற்றும் பிற வகையான இணைய மூலம் பணம் சம்பாதிக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ் மட்டத்தில் சேகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைகின்றது.
பொலிஸ் விசேட புலனாய்வு சேவை மற்றும் முப்படை புலனாய்வு பிரிவின் அறிக்கைகளையும் பெற்றுக் கொள்ள எத்தனிக்கப்பட்டுள்ளது.
(அருண)
.