நேற்று இரவு (21) ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அளித்த வாக்குறுதியின் பேரில் இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிவை எதிர்த்த விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆளும் கட்சி குழுவினர் 20 வது திருத்தத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் ஆணைப்படி ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும், மகா சங்கத்தினர் கோரிய இரட்டை குடியுரிமை தொடர்பான திட்டங்களும் இதில் அடங்கும் என்றும் இரட்டை குடியுரிமைக்கு எதிரான ஆளும் கட்சி குழுவுக்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலெஸின் ஏற்பாட்டில் நேற்று இரட்டை குடியுரிமைக்கு எதிரான ஆளும் கட்சி குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கியமான கலந்துரையாடலின் போது இது நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாண்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 வது திருத்தத்தை ஆதரிப்பதாகவும், ஜனாதிபதியால் அளிக்கப்பட்ட வாக்குறுதியை கருத்தில் கொண்டு அரசாங்கத்தை பாதுகாக்க வாசுதேவ நாணயக்கார முன்வைத்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கலந்துரையாடலில் பங்கேற்ற ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ இந்த முன்மொழிவுக்கு உடன்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷவின் நண்பர் ஒருவர், சஜித் பிரேமதாசவின் கட்சியிலிருந்து டயானா கமகே உள்ளிட்ட சமகி ஜன பலவேயவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் சேர முடிவு செய்ததன் மூலம் விமலின் குழு பலவீனமடைந்துள்ளதாக தெரிவித்தார்.