இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றுக்கு உள்ளான 78 வயதுடைய நபரொருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்றுடன் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.