சுகாதார அமைச்சின் பேச்சாளர் பதவியிலிருந்து மருத்துவர் ஜயருவன் பண்டார நீக்கப்பட்டுள்ளார்.இன்று காலை சுகாதார அமைச்சர் பவித்திராவன்னியாராச்சி இந்த உத்தரவைபிறப்பித்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தனது பதவிநீக்கத்திற்கான காரணங்கள் எதனையும் அமைச்சர் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக பணியாற்றிய அவரை ஒக்டோபர் மாதம் அந்த பதவியிலிருந்து நீக்கிய அரசாங்கம் சுகாதார அமைச்சின் பேச்சாளராக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.