கொரோனா தொற்று பரவும் நிலையில் மக்கள் முகக் கவசம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி அரச மருந்தக கூட்டுத்தாபனம் கொள்ளை லாபமீட்டத் தொடங்கியுள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்னறனர்.
அரச மருந்தகங்களில் விற்பனைக்கு வைத்திருக்கும் முகக் கவசங்கள் தற்போது ரூ.45க்கு விற்கப்பட்ட போதிலும் அவை சமீபத்தில் ரூ. 5.75க்கு விற்கப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். விநியோகஸ்தர்களிடமிருந்து அதிக விலைக்கு முகக் கவசங்களை வாங்கி விற்பனை செய்வதனால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.