கொழும்பு – புறக்கோட்டையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபை மத்திய பஸ் நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள பஸ் நிலையம் என்பன இன்று (15) நள்ளிரவு முதல் திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஏ.எஸ்.பீ. வீரசூரிய குறிப்பிட்டார்.