கொரோனா தொற்று ஏற்படுமென எண்ணி மீனை உட்கொள்வதற்கு பயப்பட வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பச்சையாக மீன் ஒன்றை உட்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாங்கள் மீனை பச்சையாக உட்கொள்வோம், பச்சையாக உண்ணும் போது சுவையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.