தனிமைப்படுத்தல் முகாமாக பயன்படுத்தும் போகம்பரை பழைய சிறைச்சாலையிலிருந்து கடந்த 17ம் திகதி இரவு சில கைதிகள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
அதன்போது சிறைச்சாலை காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு தடுப்புக் கைதி இறந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. கடுமையான காயங்களுக்குள்ளான இன்னொரு தடுப்புக் கைதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பிச் சென்ற இன்னொரு கைதியை நேற்று மாலை கைது செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.