கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதா ? புதைப்பதா? என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் முதற்கட்ட தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த சடலங்கள் தமது இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை குறித்த உடல்களை தகனம் செய்யுமாறு குறித்த குழு அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இறுதி பரிந்துரையை முன்வைப்பதற்கு அதனுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என அந்த குழு அறிவித்துள்ளது.