இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் விடுதலை செய்ய எண்ணியுள்ள கைதிகளில் வடக்குகிழக்கை சேர்ந்த அரசியல் கைதிகளும் உள்ளனரா என்ற செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கின்றனர் அவர்களை அரசியல் கைதிகள் என தெரிவிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் குற்றவாளிகள் அவர்களின் குற்றங்களின் அடிப்படையிலேயே தண்டிக்கப்படுகின்றனர் அவர்களின் இனத்தினை அடிப்படையாக வைத்து தண்டிக்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.