தனது வீட்டுக்குச் செல்வதற்குப் பாதையொன்று இன்மையால் மாத்தறை நகர சபைக்கு முன்னால் அமைந்துள்ள மின் கம்பத்தில் ஏறி நபரொருவர் நேற்று காலை எதிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினார்.
மாத்தறை, பொல்ஹேனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை தீயணைப்புப் படையினரின் உதவியுடன் மேற்படி நபர் கீழே இறக்கப்பட்டதையடுத்து மாத்தறை காவல் துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.