கொரோனா வைரஸால் இறந்த இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமரதுங்க .சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
COVID-19 நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களை அடக்கம் செய்வது தொடர்பான அனைத்து அறிவியல் தகவல்களும் கிடைக்கும் வரை எந்தவொரு அறிக்கையையும் வெளியிட அவர் அவசரப்படவில்லை என்றும், தகனம் செய்வதை நியாயப்படுத்த வழங்கப்பட்ட காரணங்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அறிஞர்களுடன் கலந்துரையாடப்பட்ட பின்னர் ஆதாரமற்றவை என்பதை உணர்ந்த பின்னரே இந்த அறிக்கை வெளியிட்டுள்ளதாக அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறுகையில், நல்லடக்கம் செய்வது முஸ்லிம்களிடத்தில் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக இருந்து வருகிறது, மேலும் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் அடக்கம் செய்வதற்கான அவர்களின் மத சடங்குகளை கடைப்பிடிக்க முஸ்லிம் சமூகத்திற்கு சட்டபூர்வ உரிமை உள்ளது.
உலகம் புராணத்தின் மூலமாக அல்லாமல் விஞ்ஞானத்தின் மூலமாக முன்னேறியது என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, அதன்படி செயற்படுமாறு அரசாங்க அதிகாரிகளை கேட்டுள்ளார்.