ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வடக்கில் உள்ள ஒரு தமிழ் தேசியவாத கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய உரிமை கோரி வடக்கில் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (டி.என்.பி.எஃப்) பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்
இப்பகுதியில் உள்ள உள்ளூர் முஸ்லிம்களும் தமிழர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 25) யாழ்ப்பாண சந்திப்பில் நடந்த போராட்டத்தில் இணைந்துகொண்டதாக மாகாண நிருபர்கள் தெரிவித்தனர்.
சடலங்களை அடக்கம் செய்வது முஸ்லிம் மக்களின் உரிமை என்று சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார், அந்த உரிமையை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.
கொரோனா தொற்றால் மரணித்தவர்களை விஞ்ஞான அடிப்படையில் அடக்கம் செய்ய உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்திருந்தபோதிலும், TNPF பொதுச்செயலாளர் இலங்கையில் அத்தகைய உரிமையை எந்த அடிப்படையில் மறுக்கமுடியும் என அவர்கேள்வி எழுப்பினார்.