நான் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.