கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் ஓய்வு பெற்ற லெப்டினன் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்தளத்திற்குத் தெரிய வந்துள்ளது.
தன்னைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கியிருப்பதாக கமல் குணரத்ன அண்மையில் அவரது நெருங்கிய வர்த்தக நண்பர்களுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய அண்மையில் தனது அரசியல் பார்வையில் இவ்வாறு எழுதியிருந்தார்.
“கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அனைத்து தோ்தல் தொகுதியிலும் முன்னாள் படை வீரர்கள் 40 பேர் வீதம் இணைத்து பிரிவொன்றை உருவாக்கப் போவதாகத் தெரிய வந்துள்ளது. அவர் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட இருப்பவர் அவரது “வியத் மக” அமைப்பின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான முன்னாள் ஜெனரல் ஒருவேயாகும்”