ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கந்தளாய் நகரில் இடம்பெற்ற பிரசாரக்
கூட்டத்தின் போது ஸ்ரீ.ல.சு.கட்சி திருகோணமலை மாவட்ட தலைவியும், கிழக்க மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான ஆரயவதி கலப்பதிக்கும் மொட்டு கட்சியின் ஆதரவாளர்களால் “ஹூ” கோஷமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஹூ கோஷமிடப்பட்டதால் தனது உரையினை இடைநடுவில் கைவிட்ட ஆரியவதி, பின்னர் ஹூ கோஷம் முடிவடைந்ததும் உரையாற்றுமாறு அழைத்த போதிலும் அவர் அந்த அழைப்பை நிராகரித்தார்.