1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்வதற்காக இனியும் பொதுஜன பெரமுணவின் பிரசார மேடைகளில்

ஏறுவதில்லை என ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

மொட்டு மேடையில் ஏறும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து மொட்டுவின் பிரதேச அரசியல்வாதிகள் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக “ஹூ” கோஷம்  போடுவதே இத்தீர்மானத்திற்கான காரணமாகும். இதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷவுக்காக தனியாக  மக்கள் கூட்டங்களை நடாத்துவதற்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதுவரையில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் சுமார் ஆறு பேருக்கு இவ்வாறு மொட்டு மேடைகளில் வைத்து “ஹூ” கோஷம் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி