1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

செய்தி

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் படி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதன் காரணமாக, வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலிருந்து நாள்தோறும் மருந்துகளை பெற்றுக் கொள்ளும் ஏராளமான நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ளது. அங்கு நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் 14ஆக அதிகரித்துள்ளது.

முன்னால் சபாநாயகார் கருஜயசூரிய முன்வைத்த வேண்டுகோளுக்கு  இனங்க நாட்டின் தற்போதைய நிலைமை சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடாத்துவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை (24) காலை 10 மணிக்கு அலறிமாளிகையில் கூடவுள்ளது.

வெட் வருமான வரி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் என்பன ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு இன்று காலை தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் இதுவரையில் 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டு உள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதி காலை 6 மணி வரை நாடு பூராகவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும்  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அவரது பத்தரமுல்லயில் உள்ள வீட்டில் தன்னை தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 2,74,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,397 பேர் பலியாகி உள்ளனர்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி