கிளப் வசந்த என்றழைக்கப்படும்
சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 21 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் மிரிஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் இன்று (21) நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிளப் வசந்த இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.