சிலாபம் , சிங்கபுர பகுதியில்
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தம்பதியரும் அவர்களது மகளும் உயிரிழந்த சம்பவம் கொலையாக இருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது .
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர் .
நேற்று முன்தினமிரவு (19) இரவு வீடொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயை அணைத்த பின்னர், விசாரணை அதிகாரிகள் வீட்டில் மூவரின் சடலங்களைக் மீட்டனர். இறந்தவர்கள் 51 வயதான தந்தை , 44 வயது தாய் மற்றும் அவர்களின் 15 வயது மகள் என அடையாளம் காணப்பட்டனர் .
தாயின் சடலம் படுக்கையறையில் படுக்கையில் காணப்பட்டதுடன், அவரது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .
மேலும், வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன .