கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில்
அமைந்துள்ள முன்னாள் எம்பி ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திடீரென ஏற்பட்ட தீ சில நிமிடங்களில் அணைக்கப்பட்டதாக க கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தங்கியிருந்ததாகவும் அதன் பின்னர் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு சிலர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு தீயணைப்பு வண்டிகள் தீயை முழுமையாக அணைத்தன.
இந்த தீயினால் குளிரூட்டியின் உட்புறம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை பொலிஸார் தெரிவித்தனர்.