பாரியளவிலான போதைப்பொருள்
வியாபாரியான சமித்புர குடு ரொஷானைக் கொல்லத் தயார்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளுடன் இரு சந்தேக நபர்கள் மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து 22 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 மற்றும் 37 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்துள்ளனர்.