பாறுக் ஷிஹான்
தனது மாமனாரை தாக்கிக் கொலை
செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் தலைமறைவாகி இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(21) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிவேரியன் கிராமம் பிரிவு-09 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை(21) அதிகாலை குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றது்
இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி 62 வயதுடய மீராசாயிப் சின்னராசா என்பவர் மரணமடைந்திருந்தார்.
மரணமடைந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் இரவு கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவ இடத்துக்கு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் சென்று விசாரணகைளை மேற்கொண்டார்.
இச்சம்பவத்தில் மாமனாரை தாக்கி படுகொலை செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியிலும் ஏனைய நான்கு சந்தேக நபர்களும் சாய்ந்தமருது பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
.