ஜனாதிபதித் தேர்தல் திகதி
அறிவிக்கப்பட்டதன் பின்னர் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இன்று (23) பிற்பகல் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பல வேட்பாளர்களின் பெயர்கள் கூறப்பட்டு வருகின்றன.
அந்த வேட்பாளர்கள் கட்சியில் போட்டியிடுவதாக எழுத்து மூலம் கட்சிக்கு அறிவிக்க வேண்டும் என்றும், அந்த அறிவிப்பின் பின்னர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை முடிவு செய்து அறிவிப்பை ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மேலும் தெரிவித்துள்ளது.