பெலவத்தை பிரதேசத்தில்
உள்ள அரச நிறுவனமொன்றின் அறையில் வைத்து 16 வயதான மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார் எனக் கூறப்படும் நடன ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
ஆரம்பக் கட்ட விசாரணையின் பின்னர், பாலியல் வன்கொடுமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்க வந்தபோது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான நடன ஆசிரயர் ஒரு வாரத்துக்கு முன்னர் ஹங்வெல்ல பொலிஸாரால் மற்றுமொரு சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ரணல பிரதேசத்தில் வசிக்கும் தனியார் நடன வகுப்பு ஒன்றை நடத்தி வந்த நடன ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.