ஹம்பாந்தோட்டையில் நான்கு
பேருடன் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கடற்படை வாகனத்துடன மோதியுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் 33 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை மானஜ்ஜவ பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.