அதுருகிரிய நகரில் உள்ள
பச்சை குத்தும் நிலையத்தில் “கிளப் வசந்த” உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்றது மற்றும் நால்வரை காயப்படுத்திய சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற வேன் மற்றும் பஸ் சாரதிகள் இருவர் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து இருவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அத்துருகிரிய பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்த போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதன்படி, உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.