எதிர்வரும் செப்டெம்பர் மாதம்
முதல் அரச சேவை ஓய்வூதியர்களுக்கு மூவாயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் வரை இந்தக் கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச சேவை ஓய்வூதியத்தில் நிலவும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கு இந்த விசேட கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.