கண்டியில் நடைபெற்ற கேக்
கண்காட்சியை புகைப்படம் எடுத்த புகைப்படக்கலைஞர் ஒருவர், வட்ஸ்அப் மூலம் ஏற்பாட்டாளருக்கு அனுப்பிய புகைப்படங்களுடன் நிர்வாண புகைப்படம் ஒன்றையும் அனுப்பிய குற்றச்சாட்டில் கண்டி பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிர்வாணப் புகைப்படம், கேக் கண்காட்சியின் புகைப்படங்களுடன், தவறுதலாக அந்தப் பெண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக புகைப்படக் கலைஞர் கூறியுள்ளார்.
66 வயதான புகைப்படக் கலைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.