முன்னாள் இராணுவ அதிகாரி
ஒருவரின் மனைவியை தாக்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 37 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தில் கடமையாற்றும்போது முறைப்பாட்டாளரின் கணவர் மரணமடைந்ததையடுத்து, சந்தேக நபருடன் சில மாதங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் எப்போதும் குறித்த பெண்ணிடம் பணம் கேட்டு தகராறு செய்வதுடன் இதற்கு முன்னரும் பணத்துக்காகப் பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.