தற்போதைய ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.
அவரது சகோதரர் சன்ன விக்கிரமசிங்க. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனாட்ல் பெரேரா மற்றும் சட்டத்தரணி யசஸ் டி சில்வா ஆகியோர் சில நிமிடங்களுக்கு முன்னர் இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இதற்கான கட்டுப் பணத்தைச் செலுத்தினர்.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளை (27ஆம் திகதி) காலி நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக மக்கள் முன்னிலையில் ஜனாதிபதி அறிவிக்க உள்ளார்.