ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா கருத்துத் தெரிவித்துள்ளார்.
மக்களின் இறையாண்மை என்பது பாரிய விநோதமாக மாறியுள்ள போதிலும், ஜனாதிபதி இலங்கை அரசியலமைப்புக்கு கட்டுப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் எஞ்சிய பதவிக் காலத்தை மாத்திரமே தற்போதைய ஜனாதிபதியால் ஈடுசெய்ய முடியும் என முன்னாள் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார்.