பதில் பொலிஸ் மா அதிபர்
ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்தவித சட்ட ஏற்பாடுகளும் கிடையாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இல்லை.
"பொலிஸ் மா அதிபரின் பணியை இடைநிறுத்தம் செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும் என்பதை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்துக்கு நினைவூட்டுகிறோம். இது தொடர்பாக விரைவில் தலையிடு
மாறு சபாநாயகரை கேட்டுக் கொள்கிறோம்." என்றும் பிரதமர் கூறினார்.