கனேடியப் பிரதமரால்
ஜூலை 23 ஆம் திகதிவெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதாக இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கனடாவின் உள்ளூர் வாக்கு வங்கி அரசியல் பின்னணியிலிருந்து எழும் இந்த குற்றச்சாட்டு இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கத்துக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்துள்ளது.