தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைக்காது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து முக்கிய வேட்பாளர்களுடன் பேசி தகுந்த முடிவு எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உட்பட வடக்கில் உள்ள நான்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை நிறுத்துவதற்கு அண்மையில் தீர்மானித்திருந்தன.