210 பொலிஸ் அதிகாரிகளை
ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் ( முன்னர் விடுக்கப்பட்டது) விடுத்த கோரிக்கையை தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றக் கொள்கையின்படி பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறு அதிக எண்ணிக்கையான இடமாற்றங்களை வழங்குவது பொருத்தமானதல்ல என தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.