முன்னாள் ஜனாதிபதியும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதியுயர் தலைவருமான மஹிந்த ராஜபக்க்ஷவை, ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் இன்று (27) விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் ஆதரவைப் பெறுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவை வழங்க வேண்டுமென சாகல ரத்நாயக்க மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இதன்போது, திங்கட்கிழமை அரசியல் உயர்பீடத்துடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.