ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க
தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்க்ஷ்மன் நிபுணராச்சியை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
இதன்படி, 2020 பொதுத் தேர்தலின் விருப்பப் பட்டியலைக் கருத்தில் கொண்டு, வெற்றிடமான சபை உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்