பாராளுமன்ற நுழைவாயிலுக்கு
அருகில் இராணுவத்தினருக்குச் சொந்தமான டிஃபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இலங்கை இராணுவத்துக்கு சொந்தமான இந்த டிஃபெண்டர் வாகனம் இன்று (25) அதிகாலை 05.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
பெலவத்தையில் இருந்து பாராளுமன்ற வீதியை நோக்கி பொரளைக்குபயணித்தபோது, டிபெண்டர் வாகனம் திவவன்னா சதுப்பு நிலத்தில் வீழ்ந்துள்ளது.
குறித்த வாகனத்தில் சாரதி மட்டும் இருந்துள்ளார். அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
பின்னர், சுமார்இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் வாகனம் மீட்கப்பட்டது.