புதிய ஆண்டின் தொடக்கத்தில் சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்துங்கள் முஸ்லிம் மக்களை மகிழ்விக்கும் வகையில் செயல்படுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்."நாங்கள் ஒரு புதிய ஆண்டை எதிர்கொள்கிறோம். நாளை நம் முஸ்லிம் மக்களின் இதயங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்."
"வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்து" என்ற கருப்பொருளின் கீழ் டிசம்பர் 31 புதன்கிழமை பொரல்ல கனத்தை மயானத்தின் முன்னால் நடைபெற்ற போராட்டத்தின் போது முஸ்லிம் மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க அரசாங்கத்துடன் ஒவ்வொரு புத்தாண்டிலும் போராட வேண்டியிருக்கின்றது.
"ஜனநாயகத்திற்கான போராட்டத்தை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்" என்று இடதுசாரிய இயக்கத்தின தலைவர் கூறினார்.
கொரோனா தொற்று நோயால் இறக்கும் முஸ்லிம்களை உடனடியாக தகனம் செய்வதைத் தடுக்கும் போராட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் தலைமைகளும் இணைந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
போராட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர் விக்ரமபாஹு கருணாரத்ன, புத்தரின் போதனைகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறும் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் பௌத்த மதத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று கூறினார்.