சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் ஒரு சர்வதேச நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கும் (பி.சி.ஆர்) டெண்டர் மோசடிகள் மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்களை சிஐடி கண்டுபிடித்தது.இது தொடர்பாக 40 பேரிடமிருந்து ஏற்கனவே அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் குழுவில் மருத்துவ வழங்கல் பிரிவின் மூத்த அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரிகள் உள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) பி.சி.ஆர் பரிசோதனைக்காக 2000 என்று அறித்த போதிலும், அவர்கள் ரூ .4,000 செலுத்தி ஒரு ஜெர்மன் நிறுவனத்திடமிருந்து பி.சி.ஆர் அறிக்யைபெற்றுக் கொண்டுள்ளதாக உளவுத்துறை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது.
ஒரு நாளைக்கு 50,000 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு முன்மொழிந்தவிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் நிறைய பணம் சம்பாதிக்க தயாராகி வருவது தெரியவந்ததையடுத்து, சிஐடியிடம் விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டன,
கடந்த வார இறுதியில், சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 1.2 மில்லியனைத் தாண்டியது, அதற்காக அரசாங்கம் ரூ .720 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது.
(அருண செய்தித்தாள் - திஸ்ஸ ரவீந்திர பெரேரா)