ஈ.டி.ஐ. நிதி மற்றும் ஸ்வர்ணமஹால் ஜுவல்லர்ஸ் பணிப்பாளர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்த ஐ.ஜி.பி சந்தன விக்ரமரத்னவுக்கு அட்டர்னி ஜெனரல் தப்புல.த லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.
சட்டவிரோத வைப்புத்தொகை, முறைகேடு மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சட்டமா அதிபரி்ன் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்தார்.
அதன்படி, 2007-2012 வரை நிறுவனத்தின் பணிப்பாளர்களாக பணியாற்றிய ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகிய குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது.