கொரோனா தொற்று காரணமாக மரணிப்போரை தகனம் செய்ய மாத்திரம் அனுமதிக்கும் வர்த்தமானியை மாற்றுமாறு அரசாங்கத்தை கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .
சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வந்தது.கொரோனா தொடர்பாக அவ்வளவாக தெரியாத காலகட்டத்தில் இறந்தவரை தகனம் செய்யவும் முடியும் புதைக்கவும் முடியுமென அறிவிக்கப்பட்டது .2020ஏப்ரல் மாதம் வெளியிட்ட வர்த்தமானி இன்றுவரை மாற்றப் பாடாமைக்கு அரசியல் மற்றும் இனவாத காரணங்களே உள்ளன.ஒரு சமூகத்தின் மனதை புண்படுத்தி நாட்டை முன்னேற்ற முடியாது.
பலரது பிரார்த்தனைகள் எதிரானதாக இருந்தால் அதன் விளைவுகள் மோசமாக அமையும்.
கொரோனவினால் இறப்போரை தகனம் செய்ய மாத்திரம் அனுமதிக்கும் வர்த்தமானியை மாற்றுமாறு கோருகிறோம் .அம்பாறையில் ஜனாதிபதி ஹரின் பெர்னாண்டோ இது பற்றி கூறியதை மட்டும் பலரும் பேசுகின்றனர்.பயிர்செய்கைக்குரிய காணிகளை விடுவிக்குமாறு அவர் பணித்தார்.