ஜனாதிபதி தோ்தலில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கும் வரையில் சுயாதீனத் தொலைக்காட்சி சேவை (ITN) யின் ஊடாக ஒளிபரப்பப்படும்
அரசியல் பின்புலத்தைக் கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடைகளை ஏற்படுத்தி நேற்று (02) வெளியிட்ட உத்தரவை நீக்கிக் கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது.
குறித்த உத்தரவு தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைக் கவனத்திற் கொண்டதன் பின்னர், விஷேடமாக ஒரு தொலைக்காட்சி அலைவரிசை்கு மாத்திரம் இவ்வாறான உத்தரவை வழங்கியதன் காரணமாக வேறான கவனிப்பு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைக் கவத்திற்கொண்டதன் பின்னர் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊடாக அரசியல் நேர்காணல்கள் போன்றவற்றை இடைநிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவு நீக்கிக் கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்ழு சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவருக்கு இன்று அறிவித்துள்ளது.