மின் மக்கள்தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உள்நாட்டலுவல்கள்
இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் இன்று (05) இடம்பெற்றது.
களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வேலைத்திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் துரிதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் சர்வதேச தரத்திற்கமைய இந்த தேசிய பிறப்புச் சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கம் தேசிய அடையாள அட்டை இலக்கங்களாக மாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குழந்தை பிறக்கும்போதே அடையாள எண்ணைக் கொடுத்து அதன் மூலம் மக்கள் தொகைப் பதிவேட்டை உருவாக்கலாம்.
தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடைமுறை - சான்றிதழில் சேர்க்கப்பட வேண்டிய தகவல்கள் பின்வருமாறு,