பல்வேறு இடங்களில் சொகுசு
வாகனங்கள் கைவிடப்படுவது தொடர்பாகக் கிடைத்த பத்து முறைப்பாடுகளில் ஒன்பது முறைப்பாடுகள் பொய்யானவை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி முதல் அரசாங்கத்துக்குச் சொந்தமான சொகுசு வாகனங்கள் கைவிடப்பட்டுக் கிடப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தந்த இடங்களில் நடத்தப்பட்ட விசாரணையில், சில இடங்களில் இதுபோன்ற வாகனங்கள் இல்லை என்பதும், சில இடங்களில் உள்ள வாகனங்களுக்கு உண்மையான உரிமையாளர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை தவறாக வழிநடத்துவது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.