குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்
நாளை (23) ஆஜராகத் தயார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.
சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் கார் நிறுத்தப்படும் இடத்தில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்காகவே சிஐடியில் முன்னிலையாகிறார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தன்னைக் கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.